Tuesday, January 1, 2013

பூனையை ஏன் நாய் துரத்துக்கிறது தெரியுமா?

ஒரு ஊரில் நாயும், பூனையும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருதார்கள். கணவர் நாயானது கடுமையான உழைப்பாளி.  அதிகாலை எழுந்த உடன் வேலைக்கு சென்று விடும். வேலை முடிய இரவாகி விடும். வேலையை முடித்து விட்டு வேலைக்கான கூலியை வைத்து வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வரும்.  வீட்டிற்கு வரும் பொழுது நாயுக்கு பசி வயிறை கிள்ளும்.

பசிக்கும் பொழுது உணவு இருந்தால் யாராவது வேண்டாமென சொல்வார்களா என்ன?  ஆனால் நாய் வீட்டிற்க்கு வந்தால் உணவு தயராக இருக்காது.

நாய்,பூனையிடம் ஏன் உணவு தயார் செய்ய வில்லை என கேட்டால "எனக்கு உடம்பே சரி இல்லை" ன்னு சொல்லும்.  நாயும் வேற வழி இல்லாமல் பூனைக்கும் அது குட்டிகளுக்கும் சேர்த்து சமைக்கும். சாப்பிட்டு உறங்க செல்ல நடுநிசி ஆகிவிடும். இந்த வழக்கம் ஒரு நாள்,இரண்டு நாள் இல்லாமல் வார, மாத கணக்கில் தொடர்ந்தது. இதனால் நாயின் உடம்பில் வலு குறைய ஆரம்பித்தது. சரியான உறக்கம் இல்லையெனில் கஷ்டம் தானே?

நாய்,பூனையை டாக்டரிடம் அழைத்து செல்லலாம் என எண்ணி பூனையிடம், " உன்னுடைய உடம்பை டாக்டரிடம் சென்று காண்பிப்போம்" என அழைத்தது.அதற்க்கு பூனை வர மறுத்துவிட்டு, " எல்லாம் கொஞ்ச நாளான சரியாய் போகும்ன்னு" சொல்லி போக்கு காட்டியது.

இந்த விஷயம் நாயிக்கு சந்தேகத்தை கிளப்பியது. "உண்மையிலயே பூனைக்கு உடம்பு சரி இல்லையா? இல்ல நம்ம கிட்ட பொய் சொல்லுதானு கண்டுபிடிக்க ஆசை பட்டது". ஒரு நாள் காலை வேலைக்கு செல்வது போல கிளம்பி ஒரு மறைவில் ஒளிந்து கொண்டு பூனை என்ன செய்கிறது என கண்காணிக்க ஆரம்பித்தது.

பூனையானது கணவர் வேலைக்கு சென்று விட்டார் என எண்ணி தனது குட்டிக்குளுடன் சந்தோசமாக விளையாட ஆரம்பித்தது. விளையாண்டு முடித்தவுடன் நன்கு படுத்து உறங்கியது. தனது நாளை சோம்பேறியாகவே கழித்தது. இதை எல்லாம் மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருத்த நாய், மிகவும் கோபத்துடன் பூனையின் எதிரே சென்று நின்றது. இதை பார்த்த பூனை சடாலென ஒரு கூலாங்க் கல்லை எடுத்து வாயினுள் வைத்துக் கொண்டு எனக்கு  "காலையில் இருந்து ஓரே பல் வலி"என பொய் சொல்லியது. எல்லாம் மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருத்த நாயிக்கு பொய் என தெரியாத என்ன? 

நாய் மிகவும் கோபத்துடன் பூனையை விரட்ட ஆரம்பித்தது , அது இன்றும் நிற்காமல் தொடர்கிறது என ஒரு அமெரிக்க் கதை ஒன்று சொல்கிறது.

1 comment:

  1. நல்லது... நன்றி...

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete