Thursday, January 3, 2013

கண் தெரியாத பிச்சைக்காரரின் இனிய நாள்!!!

கடை தெரு ஒன்றில் கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் அருகில் ஒரு பலகையில் "எனக்கு கண் தெரியாது, உதவி செய்யுங்கள் " என்று எழுதி வைத்திருந்தார்.  இதை பார்த்து அவ்வழியில் செல்வோர் அவருக்கு உதவி செய்தனர்.

அவ்வழியில்  சென்ற ஒரு நபர் அந்த பலகையில்  இருந்த வாசகத்தை அழித்து விட்டு , வேறொரு வாக்கியத்தை அதில் எழுதி விட்டு சென்று விட்டார். அந்த நாள் பிச்சைக்காரருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர். பிச்சைக்காரருக்கு மிக்க மகிழ்ச்சி. எனவே அதில் என்ன வாக்கியம் இருக்கிறது என தெரிந்து கொள்ள அவ்வழி சென்ற ஒருவரிடம் , "இந்த பலகையில் இருக்கும் வாக்கியத்தை எனக்கு வாசித்து காட்ட முடியுமா?"  என கேட்டார்.

அந்த நபர் வாசித்தார்,  "இந்த நாள் மிகவும் அழகான நாள், ஆனால் என்னால் பார்க்க முடிய வில்லை!!!".

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில், நம்முடைய கருத்தை வெளிபடுத்தும் விதம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment