Tuesday, January 1, 2013

சுறுசுறுப்பு எறும்பும் , சோம்பேறி வெட்டுக்கிளியும்....


வெட்டுக்கிளி ஒன்று சந்தோசமாக பாட்டு பாடி கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியில் ஒரு எறும்பு ஒன்று தன்னை விட உயரமான,கனமான உணவை இழுத்து கொண்டு போனதை பார்த்த வெட்டுக்கிளி, "ஏய் எறும்பே எங்கே போய் கொண்டிருக்கிறாய்.. என்னை பார்த்து ஒரு வார்த்தை பேசாமல் போகிறாயே" என்று கேட்டது.


"எனக்கு தேவையான உணவை இப்பொழுது சேர்த்து வைக்கிறேன் அது எனக்கு பிற்காலத்தில் உதவியாக இருக்கும். நீயும் உனது உணவை இப்பொழுதே சேர்த்து வச்சுக்கோ.. அது உனக்கு வெயில் காலத்தில் உணவு கிடைக்காத சமயத்தில் பேருதவியாக இருக்கும் "  என எறும்பு கூறியது.

இதை கேட்ட வெட்டுக்கிளி நக்கலாக சிரித்து விட்டு, " இப்பொழுது எனக்கு தேவையான எல்லா உணவும் கிடைக்கிறேதே, பின் நான் ஏன் பிற்காலத்தை பற்றி இப்பொழுதே கவலை பட வேண்டும்" என கேலியாக பேசிவிட்டு தனது பாட்டை தொடர்ந்து பாடி கொண்டிருந்தது.



வெயில் காலமும் வந்தது.. கூடவே உணவு பஞ்சமும் வந்தது... வெட்டிக்கிளி உணவு தேடி அலையும் சமயத்தில் எறும்பை சந்திக்க நேர்ந்தது. வெட்டிக்கிளிக்கு ஒரே ஆச்சார்யும், "என்னடா யாருக்கும் உணவு கிடைக்கல. உனக்கு மட்டும் எப்படி கிடைத்து " என்று எறும்பை பார்த்து கேட்டது. 

அதற்கு எறும்பு, "உணவு கிடைக்கும் சமயத்தில் நான் சேர்த்து வைத்தேன் அது எனக்கு இப்பொழுது உதவியாக இருக்கிறது" என பதில் சொல்லி விட்டு, பசியால் வாடும் வெட்டிக்கிளிக்கு  கொஞ்சம் உணவு கொடுத்து அதன் பசியை போக்கியது.பசி போனவுடன் வெட்டிக்கிளிக்கு   ஒரே மகிழ்ச்சி..

வெட்டுக்கிளி தன்னுடைய தவறை எண்ணி வருந்தியது. இனி மேல் உணவு கிடைக்கும் சமயத்தில் கால விரயம் செய்யாமல் சுறுசுறுப்புடன் உணவை சேர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டது.

No comments:

Post a Comment