Tuesday, January 1, 2013

குரங்கும்... ஆமையும் ...

ஒரு காட்டின் வழியே ஆமை ஒன்று உணவு தேடி சென்று கொண்டிருததாம். அப்பொழுது அந்த வழியே வந்த குரங்கு ஒன்று ஆமையிடம், "ஏய் ஆமையே இந்த காட்டுக்குள்ள எங்க போறே" ன்னு கேட்டதாம்.

அதற்க்கு ஆமை, "மூன்று நாட்களா நான் சாப்பிடவே இல்லை உணவு தேடி போகிறேன்னு சொன்னதாம்.
"அப்படியா நானும் சாப்பிட்டு மூன்று நாட்களாச்சு"..ன்னு குரங்கு பதில்  சொன்னதாம்.  அப்பிடியா அப்ப நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து உணவு தேடுவோம்னு ஆமை சொல்லுச்சாம்.

இருவரும் பேசி கொண்டே இரை தேடி சென்றனர். இருவரும் நண்பரகளாகி விட்டனர். 

தூரத்தில் குரங்கு ஒரு வாழை மரத்தை பார்த்தது. அதில் வாழை பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன. இதை ஆமையிடம் காண்பித்தது.  ஆமையின் கண் பார்வைக்கு தூரத்தில் இருக்கும் வாழை மரம் தெரியவில்லை. வாழை மரத்தின் அருகில் சென்று பார்த்தவுடன் ஆமைக்கு ஒரு மகிழ்ச்சி.  ஆனால் என்ன செய்ய....  மரத்தில் ஏற முடியாதே!!!  என ஆமை யோசித்து கொண்டிருந்தது. அதற்க்கு குரங்கு " கவலைபடாதே நான் உனக்கு வாழை  பழத்தை பறித்து கீழே எறிகிறேன். எடுத்து கொள்" ன்னு சொன்னது.


குரங்கு வாழை மரத்தில் ஏறி அனைத்து பழங்களையும் சாப்பிட ஆரம்பித்தது. வாழை பழ தோலை கூட விட்டு வைக்க வில்லை.  கீழே காத்திருக்கும் நண்பனை மறந்துவிட்டு சந்தோசமாக சாப்பிட்டு கொண்டிருந்தது. ஆமை கூப்பிட்டாலும் அதை சட்டை செய்யாமல் இருந்தது.

இந்த செயல் ஆமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த குரங்குக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமென எண்ணியது.
வாழை மரத்தின் கீழே உடைந்த கண்ணாடி துகள்களை பரப்பி வைத்து விட்டு ஒரு தேங்காய் மூடியின் அடியில் போய் ஒளிந்து கொண்டு என்ன நடக்கிறது என பார்பதற்க்கு ஆவலாக காத்திருந்தது.

வயிறு முட்ட சாப்பிட்ட குரங்கு மெதுவாக வாழை மரத்தின் கீழே இறங்கியது. கீழே இருந்த கண்ணாடி துகள்கள் குரங்கின் காலை பதம் பார்த்தது. கை,கால்களில் இருந்து இரத்தம்  கொட்ட தொடங்கியது. வலியால் துடித்த குரங்கு,இது ஆமையின் செயல் தான் என்பதை கண்டு பிடித்தது. ஆமையை பலி வாங்க ஆமையை  தேடியது. தேங்காய் மூடியின் அடியில் போய் ஒளிந்து கொண்டு இருந்த ஆமையை கண்டு பிடித்து அதை கொல்லத் துடித்தது.

உயிருக்கு மன்றாடிய ஆமையிடம் , "நீ நெருப்பில் சாகிறாயா என கேட்டது". அதற்க்கு ஆமை நான்  தண்ணிரில் சாகிறேன் என்று சொன்னது.  ஆமை நீரிலும், நிலத்திலும் வாழும் என்பதை மறந்த முட்டாள் குரங்கு ஆமையை ஓடும் ஆற்றில் தூக்கி வீசியது. உயிர் பிழைத்த ஆமை , " இது தான் என் வீடு " என சந்தோசமாக நீந்தி சென்றது.

இதனால் கோபமான குரங்கு ஆற்றில் குதித்து ஆமையை கொல்ல சென்றது.  ஆழமான சுழல் இருக்கும் பகுதியில் நீந்த முடியாமல் சிக்கி மூழ்கி இறந்து போனது. 

"நாம் அனைவருக்கும் நல்லது நினைத்தால் நமக்கும் நல்லது நடக்கும்"

No comments:

Post a Comment