Thursday, December 26, 2013

26-December-2013

முதலையின் நாக்கு வாயின் உட்புறத்தில் மேல் பகுதியில் ஒட்டி கொண்டிருக்கும். 

பழைய டைப்ரைட்டர் மெசின்க்களில் நம்பர் 1 விசை இருக்காது. நம்பர் " 1 " டைப் பண்ணவேண்டிஇருந்தால் சிறிய எழுத்தான " L " ஐ பயன்படுத்த வேண்டும். 

மனித மண்டை ஓடு 29 எலும்புகளால் ஆனது. 

முத்து வினிகரில் கரைந்து விடும். 

பசு இசையைக் கேட்க்கும் பொழுது அதிகமான பால் சுரக்குமாம். 

இரும்பு துரு பிடிக்கும் பொழுது முன்பை விட அதன் எடை அதிகமாக இருக்கும்.

Sunday, December 8, 2013

09-December-2013

கிரீசில் உள்ள பெரும்பாலான சினிமா அரங்களுக்கு கூரை இருக்காது. ஏன் என்றால் அங்கு நிலவும் மிதமான சூடான தட்ப வெப்ப நிலை தான் காரணம். 

ஐஸ்லாந்தில் ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் கிடையாது.

மசாலா பொருள்களில் விலை அதிகமானது குங்குமப்பூ .

மிக கொடிய விஷம் கொண்ட தவளை (Tiny Arrow Frog)2,200 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டது. 

வவ்வால்கள் பாலூட்டிகளில் மிகவும் மெதுவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. 

சராசரியாக ஒரு ஈயின் வாழ்கை காலம் ஒரு மாதம் மட்டும் தான்.

08-December-2013

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையின் எடை தான் அதிகமானது. யானை மூளையின் எடை 5 கிலோ ஆகும் . 

தான்சானியா நாட்டில் உள்ள ஒர் ஏரியின் தண்ணிர் அங்கு வரும் பறவை,மிருகங்களைக் கொன்று அவற்றைக் கல் ஆக மாற்றி விடும் தனமை கொண்டது.அதற்குக் காரணம் அந்தத் தண்ணிரின் அதிகமான PH (10.5) அள்வு தானாம். 

1988 ஆம் ஆண்டுச் சியோலில் துவங்கிய ஒலிம்பிக் போட்டியின் பொழுது ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, அந்தச் சமயத்தில் ஒலிம்பிக் போட்டியில் பறக்க விடப்பட்ட புறாக்கள் அனைத்தையும் உயிருடன் எரித்துக் கொன்று விட்டது. 

கலியம்(Gallium-Ga) என்ற் உலொகம் உஙகள் உள்ள்ங்க்கையில் உள்ள சூட்டிற்கே உருகி விடும். 

"School" என்ற வார்த்தை "Skhole" கிரெக்க என்ற வார்த்தையில் இருந்து பிற்ந்தது. 

1660 ஆம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்ப்ட்ட கடிகாரத்தில் ஒரெ ஒரு முள் மட்டும் தான் இருந்தது. நிமிடத்திற்கு என்று தனி முள் கிடையாது.

Thursday, December 5, 2013

06-December-2013

வுக்ரைனை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் வ்லாடிமிர் க்ளிட்ச்ச்கோ (Wladimir Klitschko), தான் ஜெயித்த ஒலிம்பிக் பதக்கத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வுக்ரைன் ஏழை குழந்தைக்களுக்குச் செலவிட எண்ணி 1 மில்லியன் டாலர்க்கு விற்றார். அதை வாங்கியவர் அந்த மெடலை மரியாதை நிமித்தமாக க்ளிட்ச்ச்கோ விடம் ஒப்படைத்து விட்டார். 

ஐ.நா சபை நெல்சன் மண்டேலாவின் அமைதி,சுதந்திர போராட்ட பங்களிப்பை கெளரவப் படுத்தும் வகையில்,நெல்சன் மண்டேலா பிறந்தநாள் 18th July ஒவ்வொரு வருடமும் "சர்வதேச மண்டேலா தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. 

இன்றைய தினத்தில்(6th December 1956) இந்திய அரசியலமைப்பை இயற்றிய பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இறந்தார்.

உலகில் அதிக முந்திரி உற்பத்தி செய்யும் நாடு நைஜீரியா.

2008 ஆம் ஆண்டு தான் அமெரிக்கா நெல்சன் மண்டேலாவின் பெயரை தீவிரவாதிகளின் தேடுவோர் பட்டியலில் இருந்து நீக்கியது. 

பையினப்பிள் தோன்றிய நாடு பிரேசில்.

Sunday, December 1, 2013

02-December-2013

ஆப்ரிக்க யானைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவும் , 200 லிட்டர் தண்ணீரும் தேவையாம்.

மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தன்னுடைய சொத்தில் 98 சதவிகிதத்தை செலவழித்தாலும் அவர் அப்பொழுதும் பில்லியனர் தான்...

ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல்-U1206, 1945 ஆம் வருடம் ரோந்து பணியில் இருந்த பொழுது டாய்லெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மூழ்கியது.

ஹிட்லர் சல்யுட் / நாஜி சல்யுட் என்பது நாஜி படைவீரர்கள் ஹிட்லருக்கு வழங்கும் மரியாதையாக கடைபிடிக்கப்பட்டது. 
இப்பொழுது ஹிட்லர் சல்யுட் ஆனது ஆஸ்திரியா, ஜெர்மனி, செக் ரேபபுளிகில் தடை செய்யப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் பதக்கங்கள் கலை, அறிவியலுக்கு 1912ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.

இது வரை விண்கல்(Meteorite) தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட மனிதர் ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண்மணி ஆவார்.

Saturday, November 30, 2013

01-December-2013

செஸ் விளையாட்டு முதன் முதலில் இந்தியாவில் குப்தர்களின் காலத்தில் தோன்றியது.

இது வரை கண்டுப்பிடிக்க  பட்ட மிக பெரிய பனித்தொடர் (ice berg) பெல்ஜியம் நாட்டை விட பெரியது.

இந்தியாவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 410 மில்லியன்னுக்கும் அதிகம்.

அதிகப்பட்சமாக 5949 தடவை தான் செஸ் காயின்கள் நகர்த்தமுடியும். அது தான் நீண்ட நேரம் நடக்கிற விளையாட்டாக இருக்க முடியும். 

பூமியின் வட துருவத்தில் தான் உலகின் 90 சதவிகித மக்கள் வசிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 600 மில்லியன் மக்களுக்கு செஸ் விளையாட்டு விளையாட தெரியும் .

Tuesday, November 26, 2013

27-November-2013

15 சதவிகித நத்தைகள் பறவைகளின் வயிற்றில்  உள்ளே உணவாக சென்று , பறவைகளின் கழிவாக வெளியே வந்த பின்னும் உயிரோடு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். 

நிலத்தில் வாழ் விலங்கிலயே அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடிய  விலங்கு கவ்லேர் என்ற குரங்கினமாம்.(Howler monkey). இது ஏற்படுத்தக்கூடிய சத்தம் அடர்ந்த காடுகளில் கூட மூன்று மைல் (4.8 km) தொலைவு வரை கேட்குமாம்.

ஹைட்ரசன் என்றால் கிரேக்கத்தில் நீர் உண்டாக்குபவர்(water former) என்று அர்த்தமாம்.

சீனாவில் பிறக்கின்ற ஒவொவுரு குழந்தையின் வயது பிறந்தவுடன் ஒரு வயது என கணக்கிடப்படுகிறது.

வேக்ஸ்சின்(vaccine) என்கிற வார்த்தை cow(vacca) என்ற லத்தின் வார்த்தையில் இருந்து வந்தது.

Tuesday, November 19, 2013

19-11-2013

உலக மக்கள் தொகையில் 90 சதவிகித மக்களின் கண்கள் பிரவுன் கலரில் இருக்கிறதாம். 

உலகில் அமைதியான நாடு என்ற அங்கிகாரம் தற்பொழுது ஐஸ்லாந்து நாட்டிற்குக் கிடைத்துள்ளது. 

ஐஸ்லாந்து நாட்டில் 80 சதவிகித மக்களின் கண்கள் நீலமாக அல்லது பச்சையாக இருக்கிறதாம். 

சாம்சங் நிறுவனம் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தி செய்வது பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால் சாம்சங் நிறுவனம் போர் தளவடங்களுயும் தயாரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ??? 

குதிரையால் தன் வாய் வழியாகச் சுவாசிக்க முடியாது. 

உலகிலேயே மெக்சிக்கன் நாட்டு மக்கள் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்களாம். இரண்டாம் இடம் அமெரிக்க மக்களுக்கு... 

Monday, October 7, 2013

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்.


மக்கள் கவிஞர் என்று  போற்றப்படுகின்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,தனது 29ஆம் வயதில் 1959ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் இன்றைய தினத்தில் மறைந்தார்.

அவர் மறைந்தாலும் அவரின் கருத்து செறிவான பாடல்கள் இன்றும் நம்மிடையே நீங்காமல் நிலைத்து இருக்கின்றது.

பள்ளி சென்று பயிலவில்லை, திண்ணை கல்வி மட்டும் அதுவும் ஓரிரு ஆண்டுகள் தான். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றார். பின் பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிக்கையில் இணை ஆசிரியராக பணி புரிந்தார்.

புகழ் பெற்ற நடிகரான ஓ.ஏ.கே.தேவரும், பட்டுகோட்டையாரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

இவரின் பாடல்கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தும்.  இவரின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

Tuesday, September 3, 2013

செப்டம்பர் 4 :அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட தினம்.


1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4ல் இன்றைய தினத்தில் , அண்ணா பல்கலைக்கழகம்  உருவாக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் வளாகம், தென்சென்னை பகுதியில் 100 ஏக்கர்  பரப்பில் அமைந்துள்ளது. வடக்கே அடையாறும்,தெற்கே தமிழக ஆளுனர் மாளிகையான ராஜ்பவன்  இவ்வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம்
இதன் குறிப்பிடத்தக்க முன்னாள்  மாணவர்கள் : 

1) முன்னாள்  இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்.
2) பிரபல தமிழ்  எழுத்தாளர் சுஜாதா.
3) முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

Thursday, August 22, 2013

ஜென் துறவியும்,திருடனும்...


ஜென் துறவியும்,திருடனும்...

ஒரு நாள் மாலை நேரத்தில், ஜென் துறவி ஒருவர் தன்னுடைய வீட்டில் கண்ணை மூடி  மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தார். 

அந்த சமயத்தில் திருடன் ஒருவன் பெரிய கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து துறவியிடம், "உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுக்கிறாயா... இல்ல இந்த கத்தியால் குத்துப்பட்டு சாகிறாயா???" என்று ஜென் துறவியை மிரட்டினான்.

துறவி சிறிதும் கலங்காமல்,மிக நிதானமாக, " பணம் அனைத்தும் அங்கே இருக்கும் மேஜையில் இருக்கிறது.... எடுத்துக்கொள்ளவும்..." என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஜெபத்தை தொடர்ந்தார்.

இதை கேட்ட திருடனுக்கோ ஒரே குழப்பம்... என்னடா இது... கொஞ்சம் கூட பயபடமால்  பணம் இருக்கும் இடத்தை சொல்கிறாரே!!!.. உண்மையிலேயே பணம் இருக்குமா.. நாம் இது வரை திருட சென்ற வீட்டில் எல்லாம் பணம் இல்லேன்னு தான் சொல்வாங்க.." என்று குழப்பத்துடன்  மேஜையை நோக்கி சென்றான்.


மேஜையில் பணம் இருந்தது. திருடனுக்கோ மிகவும் சந்தோசம்... பணத்தை அவசரமாக அள்ளி கொண்டு இருந்தான். 

துறவி திருடனை நோக்கி, "எல்லா பணத்தையும் எடுத்து சென்று விடாதே.... நாளை நான் வரி கட்ட வேண்டும். கொஞ்சம் பணத்தை மட்டும் விட்டு செல்..." என்று கேட்டுக்கொண்டார்..

திருடனுக்கு குழப்பம் அதிகமானது.. மனசுக்குள் "இவரு ரெம்ப நல்லவருன்னு" சொல்லிக்கொண்டு துறவிக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டின் வாசலுக்கு வந்தான்.

துறவி திருடனை திருமபவும் அழைத்தார். 

"இவ்வளவு  பணம் எடுத்தாயே... எனக்கு நீ நன்றி சொல்லவே இல்லையே!!!" என்று கேட்டார் துறவி.

திருடனுக்கோ குழப்பம் இன்னும் அதிகமானது... 

வீட்டிற்க்குள் வந்து, "மிகவும் நன்றி துறவியே..." என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

திருடன் தன்னுடயை நண்பர்களிடம் நடந்தவற்றை பற்றி கூறினான்.அவனுடைய நண்பர்களும் தங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது இல்லேயே!!! என்று ஆச்சரியப்பட்டனர்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் என்கிறார் போல திருடன் போலிசிடம் சிக்கினான்.

சாட்சிக்காக துறவியை போலிஸ் அழைத்தது. 

சாட்சி சொல்ல சென்ற துறவி, திருடனை பார்த்து "நான்  தான் இவனுக்கு பணம் கொடுத்தேன். இவன் எனக்கு நன்றி கூட சொன்னானே.. இவன் திருடன் இல்லை..." என்று துறவி சொன்னார்.

துறவியின் இந்த செயல் திருடனை திருத்தியது.

அவன் அன்றிலிருந்து திருட்டை விட்டுவிட்டு அந்த துறவியின் சீடனாக சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை நன்னெறியுடன் வாழ்ந்து கழித்தான்.

Wednesday, August 21, 2013

பிரியங்கா




பிரியங்கா என்கிற இந்த பனிரெண்டு வயது சிறுமிக்கு  சரியாக பேச, நடக்க  முடியாது. ஆனால் அவர் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விஷயம் என்னவென்றால்  120 வருட காலண்டரில்  தேதியை சொன்னால் நிமிடத்தில் துல்லியமாக கிழமையை மிகச் சரியாக சொல்கிறார். 

பிரியங்கா 

கிழமையைச்  சொல்லி அந்த மாதத்தில்  எந்த தேதியில் அந்த கிழமை வருகிறது என்று கேட்டால்  நிமிடத்தில் உங்களுக்கு தேதிகள் கிடைக்கிறது மிக சரியாய்....

இதை  எப்படி சொல்கிறாய் என்று கேட்டால்  "எனக்கு கடவுள் சொல்லிக்குடுக்கிறார்." என்று நம்மை பிரமிக்க வைக்கிறார்.

அவர் நன்கு பேச, நடக்க நாம் வாழ்த்துவோமே........



Thanks: Vikatan.com

Sunday, August 18, 2013

உங்களுக்கு தெரியுமா...



ஆயுள் தண்டனையை விலக்கி கொண்ட நாடு எது தெரியுமா ? - போர்சுகல்.

நட்சத்திர மீனை நீங்கள் உனக்கு மூளை இல்லையான்னு திட்ட முடியாது... ஏனென்றால் அதற்கு மூளை கிடையாது.

முதலை தன்னுடைய நாக்கை வெளியே நீட்ட முடியாதாம்.

பூனையின் ஒவ்வொரு காதிலும் 32 சதைகள் இருக்குமாம்.

மீன்களால் தன்னுடைய கண்களை சிமிட்ட முடியாது. ஆனால் சுறா மீன் அதற்க்கு விதி விலக்கு . சுறா மீனால் தன்னுடைய இரண்டு கண்களையும் சிமிட்ட முடியும்.

வ.உ.சிதம்பரனார் மற்றும் பாரதியார் தந்தைகள் இருவரும் நண்பர்கள்.

நோபெல் பரிசின் பரிசு தொகை ஒவ்வொரு வருடமும் நோபெல் கமிட்டியினால் நிர்ணயிக்கப்படுக்கிறது.

வாழை பழ ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு  - இந்தியா.

மைக்கேல்  ஃபாரடே தனது 14ஆம் வயதில் புத்தக விற்பனை மற்றும் பைண்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து , அறிவியல் சம்பந்தமான நூல்களை தனது ஓய்வு நேரத்தில் படித்தாராம்.

ஆங்கில சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின்  தனது 88வது வயதில் , கிறிஸ்துமஸ் (25th December 1977) தினத்தில் இறந்தாராம்.

Wednesday, August 14, 2013

15 ஆகஸ்டு 2013

இன்றைய தினம் இந்தியா தனது 67வது சுதந்திரத் தினத்தை கொண்டாடுகின்றது. 

இன்றையத் தினத்தில் சுதந்திரம் பெற போராடி தனது உயிர் நீத்த தியாகிகள் மற்றும் நாட்டை எதிரிகளிடம் இருந்து காக்கும் நமது ராணுவ வீரர்கள அனைவருக்கும் நன்றி கூறுவோம். 

Sunday, August 11, 2013

12 ஆகஸ்ட் 2013


குரங்கு அரசன் 

ஒரு பெரிய காட்டில் குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அந்த குரங்களுக்கு அரசனாக ஒரு பெரிய குரங்கு ஒன்று இருந்தது. அதனுடைய உடல் மிகவும் குண்டாகவும்,பலசாலியாகவும்,உயரமாகவும் இருந்தது. அரசன் குரங்கு மற்றவர்கள் மீது மிகவும் பாசமாகவும்,அறிவாளியாகவும் விளங்கியது.

அந்த காட்டில் சுற்றிலும் மாந்தோப்புகள் இருந்தன. அதில் மாங்காய்க காய்த்து தொங்கி கொண்டிருந்தன. சில மாமரங்கள் அந்த பக்கம் செல்லும் ஆற்றின் ஓரத்தில் இருந்தது.  
ஆற்றின் மறு முனையில் ஒரு மனித அரசன் தனது படை சகாக்குளுடன் முகாமிட்டு இருந்தான்.

அரசர் குரங்கு தனது படையில் இருக்கும் அனைத்துக் குரங்களுக்கும்  ஒரு வித்தியசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஆற்றின் ஓரத்தில் இருக்கும் அனைத்து  மாமரங்களில் இருக்கும் மாங்காய்களையும் பிடுங்க சொன்னது.

குரங்குகள் தங்களது மன்னர் உத்தரவுக்கு கீழ் படிந்து அனைத்து  மாங்காய்களையும்  பிடுங்கின. ஆனால் ஒரு மாங்காய் மட்டும் பிடுங்காமல் மரத்தில் இருந்தது. அந்த மாங்காய் பின் பழுத்து பழமாகி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் போக்கில் அடித்து சென்ற பழம் அங்கு குளித்து கொண்டிருந்த மனித மன்னர் அருகில் சென்றது. அது என்ன பழம் என்று தெரியாத மன்னர் அந்த பழத்தை தன்னுடைய அமைச்சர்களை சாப்பிட சொன்னார்.


பழத்தை சாப்பிட்ட அமைச்சர்கள் அது மிகவும் சுவையாக இருக்கிறது என்று சொன்னார்கள். மன்னரும் ருசி பார்த்தார்.. அவ்வளவு தான்.... மாம்பழ ருசியின் தித்திப்பு அவருக்கு இன்னும் கொஞ்சம் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என எண்ணி தனது படை சகாக்களுக்கு அந்த பழங்களை தேட உததரவு இட்டார்...  அவர்களுடன் சேர்ந்து மன்னரும் தேடுதல் வேட்டையில் இறங்கினார். பழம் வந்த திசையை நோக்கி அவர்கள் பயணம் தொடங்கியது.

தேடினார்கள்...தேடினார்கள்...  

இரவு,பகலாக தேடுதல் தொடர்ந்தது.மாமரங்கள் இருக்கும் பகுதியை வந்தடைந்தனர்.ஆனால் அங்கே இருந்த குரங்குகளை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த குரங்குகள் அடித்து துரத்தி விட்டு நாம் இந்த பகுதியை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்று மன்னர் எண்ணினார். அவருக்கு மாம்பழ ஆசை அவருடைய புத்தியை மறைத்தது.

குரங்குகள் அனைத்தையும் காட்டை விட்டு விரட்ட மன்னர் தனது படைக்கு உத்தரவு பிறப்பித்தார்.விளைவு....குரங்குகள் துரத்தப் பட்டன. ஓடி கொண்டிருந்த குரங்குகள் ஒரு பெரிய மலை உச்சியை சென்று அடைந்தன.மலைக்கு அந்த பக்கம் ஒரு பெரிய மூங்கில் காடு இருந்தது.. ஆனால் அந்த மூங்கில் காட்டை சென்றடைய வேண்டுமானால் மலைக்கும்,மூங்கில் காட்டிற்கும் இடைய உள்ள மிக பெரிய பாதாளத்தை கடக்க வேண்டும்.

மன்னர் குரங்கு கொஞ்சம் யோசித்து விட்டு, தனது உயிரை பொருட்படுத்தாமல் மிக நீண்ட பெரிய கை, காலை நீட்டி ,மலைக்கும், மூங்கில் காட்டுக்கும் இடையே பாலம் போன்று அமைத்தது.தனது படைகள் அனைத்துக்கும் தன் மீது ஏறி சென்று மூங்கில் காட்டை அடைய சொல்லி உத்தரவு இட்டது.

மன்னர் உத்தரவை மீற முடியுமா... அனைத்து குரங்குகளும் அரசர் உடம்பின் மீது ஏறி மலை உச்சியில் இருந்து மூங்கில் காட்டை சென்றடைந்தன.

கடைசியாக சென்ற குரங்குக்கு அரசரை கொன்று விட்டு நாம் மன்னராக வேண்டும் என்ற சூழ்ச்சி எண்ணம் இருந்தது. இது தான் தக்க தருணம் என்று எண்ணி தனது அரசரை கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தது.  தனது அரசரின் முதுகில் ஏறி ஓடும் போது அதனுடைய நெஞ்சில் மிகவும் பலம் கொண்டு குத்தியது.குத்தி விட்டு மூங்கில் காடை சென்றடைந்தது. வலி தாங்க முடியாமல் மன்னர் குரங்கு கதறிய படி  மேலே இருந்து மலை இடுக்கில் விழுந்தது.தன்னுடயை சுய நினைவை இழந்தது.

இதை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த மனித அரசர், தனது சகாக்களுக்கு குரங்கு மன்னரை காப்பாற்ற உத்தரவு இட்டார்.குரங்கு மன்னர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தது.

மனித அரசர், குரங்கு மன்னரிடம் ,"ஏன் உன்னுடைய உயிரை பணயம் வைத்து உனது சகாக்கள் அனைவரையும் காப்பாற்றினாய்?"

குரங்கு மன்னர் ,"ஏன் என்றால் நான் தான் எங்கள் இனத்து தலைவன்.. அவர்களை துன்பத்தில் இருந்து காப்பது எனது கடமை", என்று சொன்னது.

அது மட்டும் இல்லாமல் அரசர் குரங்கு, தனக்கு தீங்கு செய்த குரங்கை மன்னித்தது.

இதை கேட்ட மனித மன்னர் மனம் மாறினார். மன்னர் என்றால் நம் இனத்தவரை துன்பத்தில் இருந்து காக்க வேண்டும் என்ற பாடம் குரங்கு தலைவனிடம் இருந்து கற்று கொண்டார்..

அந்த குரங்குகள் அனைத்தையும் மூங்கில் காட்டில் எந்த துன்பம் இல்லாமல் காத்து வந்தார். 



Wednesday, August 7, 2013

07 ஆகஸ்டு 2013


07 ஆகஸ்டு 2013

07 ஆகஸ்டு  1941 , நோபல் பரிசு பெற்ற  இந்திய வங்காள மொழிக் கவிஞர்  இரவீந்தரநாத் தாகூர்  தனது எண்பதாவது வயதில் மறைந்த தினம்.

இந்திய தேசியகீதமான ஜன கண மன  பாடலை இயற்றிய பெருமை இவரையே சாரும் மற்றும் இவரது மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா பங்களாதேஷின் தேசிய கீதமாக பிரபலம் அடைந்தது.

------------------------------------------------------------------------------------------------------------
Interesting English Words

Bumbershoot - An umbrella.

Namby-pamby - Weak, with no backbone.

------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, August 6, 2013

06 ஆகஸ்டு 2013




06 ஆகஸ்டு 1962 ஆம் ஆண்டு ஜமைக்கா நாடு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றது.  இன்றைய தினம் ஜமைக்கா நாட்டினர் தங்களது விடுதலை தினமாக அதை கொண்டாடுகின்றனர்.

ஜமைக்கா என்று சொன்னவுடன் நமக்கு மின்னல் ஓட்ட வீரர் "உசைன் போல்ட்" ஞாபகம் நமக்கு வருகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

Interesting English words:

Dextrosinistral - meaning a left-handed person trained to use the right hand.

Ambidextrous - meaning a person who has the ability to write with both hands efficiently.
---------------------------------------------------------------------------------------------------------------------------------- 

தண்ணீர்...  தண்ணீர்... 

ஒரு கிராமத்தில் பாலு என்கிற ஒரு மரவெட்டி இருந்தானாம்  அவனுடைய தொழில் காட்டில் சென்று மரத்தை வெட்டி அதன் விறகை விற்று பிழைப்பை நடத்தி கொண்டு இருந்தான். தன்னுடைய தேவைக்காக நல்ல மற்றும் காய்ந்து போன மரங்களையும் வெட்டினான்.

ஒரு  நாள் காட்டில் மரம் வெட்டி கொண்டு இருக்கும் பொழுது மிகவும்  தாகம் எடுத்தது. குடிக்க தண்ணிரை தேடி காட்டில் அலைந்து திரிந்தான்.  ஒரு இடத்தில மிகவும் கொஞ்சமாக தண்ணிர் இருந்தது. அது அவனுடைய தாகத்தை முழுதும் தீர்க்கவில்லை.  அங்கே இருந்த நீரை 
குடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டான்.

வீட்டுக்கு சென்று இரவு தூங்கி கொண்டு இருக்கும் பொழுது ஒரு கனவு வந்தது.

அந்த கனவில் பூமி தாய் தோன்றினாள்.  

பூமி தாய் , "எதற்கு தெரியுமா  உனக்கு குடிக்க சொற்பமான நீரே கிடைத்தது? "

பாலு  (மரவெட்டி): "தெரியவில்லையே தாயே......"

பூமி தாய் : "மழை பொழிய மரங்கள் தேவை முக்கியம் ...., மனிதர்கள் தங்கள் சுய தேவைக்காக  எல்லா மரங்களையும் வெட்டி சாய்த்து காட்டை அழிக்கிறார்கள்... அதனால் தான் மழை பொழிவு மிக குறைவா இருக்கு.. அதனால் தான் தண்ணிர் குறைவாக கிடைக்கிறது....." என்று சொல்லிவிட்டு பூமி தாய்  மறைந்துவிட்டாள்.

கனவில் இருந்து எழுந்த மரவெட்டி, அடுத்த நாள் முதல் மரம் வெட்டும் தொழிலை அடியோடு விட்டு விட்டு புதிதாக வேறு வேலை செய்து பிழைப்பை நடத்தினான்.

இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மரங்களை வெட்டினால் மழை பொழிவு குறையும்.


Sunday, January 13, 2013

பெரிய சோம்பேறி யார்???


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது.

மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கு அணிந்து கொள்வான். உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கு அணிந்து கொள்வான். முன்புறம் அணிய வேண்டியதைப் பின்புறமாக அணிந்து கொள்வான். பின்புறம் அணிய வேண்டியதை முன்புறம் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான்.

அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான் அவன். அமைச்சர்கள் ஐந்து பேரையும் அரசவைக்கு வரவழைத்தான்.

இளவரசிக்குத் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல எனக்கு மருமகனாக வீரன் வேண்டாம். அறிவுள்ளவன் வேண்டாம். நல்ல பண்புள்ளவன் வேண்டாம். அழகானவனும் வேண்டாம், என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் திகைப்பு அடைந்தனர்.

இளவரசியார்க்கு யார் கணவனாக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார் ஓர் அமைச்சர்.

சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும். மிகப் பெரிய சோம்பேறியைத் தேடும் வேலையை உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன், என்றான் அரசன்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அரசே! என்று கேட்டார் இன்னொரு அமைச்சர்.

உங்க ஒவ்வொருவருக்கும் ஓராண்டு தவணை தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான் அரசன். ஐந்து அமைச்சர்களும் அரசனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள். ஐவரும் வெவ்வேறு திரைகளில் பிரிந்தார்கள்.
ஓராண்டு கழிந்தது. ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களை வரவேற்றான் அரசன்.

முதலாம் அமைச்சனைப் பார்த்து, உம் அனுபவங்களைச் சொல்லும். எனக்கு மருமகனாகும் சோம்பேறியை எங்கே கண்டுபிடித்தீர்? சொல்லும், என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.

அரசே! நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ விந்தையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. இருந்தும் சோம்பேறிகளைத் தேடி அலைந்தேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசியார்க்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பெரிய சோம்பேறியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். என்றான் அமைச்சன். அவன் என்ன செய்தான்? என்று கேட்டான் அரசன்.

அந்தச் சோம்பேறியை வழியில் சந்தித்தேன். அரசே! அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது, என்று பதில் தந்தான் அவன், என்றான் அமைச்சன்.

இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன்.

குறுக்கிட்ட இரண்டாம் அமைச்சன், அரசே! நானும் ஒரு சோம்பேறியைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், என்றான். உன் அனுபவங்களைச் சொல், என்றான் அரசன்.

அரசே! உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றேன். ஓர் ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைக் கண்டேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது- பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல இருந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன்.


சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் முக சவரம் செய்யும் கத்தி துருப்பிடித்துக் கிடந்தது. அங்கிருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். நல்ல சோம்பேறிதான், என்ற அரசன், அவன் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறானா அல்லது அதற்கும் சோம்பலா? என்று கேட்டான். அவன் சில சமயங்களில் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறான். அது மட்டும் அல்ல. தன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான், என்றான்.

மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்று கேட்டான், அரசன்.

அரசே! நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஓர் ஊரில் சோம்பேறி ஒருவனைக் கண்டேன். உங்களுக்கு மருமகனாக மிகவும் பொருத்தம் உடையவன். சோம்பல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவன். வெளியே இருந்தவர்கள் எல்லோரும் கத்தினார்கள். எந்தப் பயனும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள், என்றான்.

உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான், என்ற அரசன் நான்காம் அமைச்சனைப் பார்த்தான்.
அரசே! நான் காடு மலைகளில் அலைந்தேன். முட்புதர்களில் சிக்கி என் உடைகள் கிழிந்து விட்டன. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் அந்தச் சோம்பேறியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றான் அவன். அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான் அரசன். அரசே! அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப்படுத்திருக்கிறான். தன் வாயிற்கு அருகே காரட் முள்ளங்கி ஏதேனும் முளையாதா என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச் செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட அவன் தன் கை விரல்களைப் பயன்படுத்தவில்லை. மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் உண்பான். பக்கத்தில் விழுந்தால் அதை எடுத்து உண்ண மாட்டான், என்றான் அவன். அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன்.

அவனிடம் நீண்ட நேரம் பேசினேன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான். தன் மூக்கிலோ அல்லது வாயிலோ பழ மரம் முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பழத்திற்காக நான் வாயைத் திறந்து கொண்டு படுத்திருக்க வேண்டாமே என்றான் அவன், என்று விளக்கமாகச் சொன்னான், அமைச்சன். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன். என் மகளுக்கு ஏற்றவன், என்ற அரசன் ஐந்தாம் அமைச்சனைப் பார்த்தான்.

உடனே அந்த அமைச்சன், அரசே! நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். நீ பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்றான் அரசன்.

அரசே! சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். ஒரு நாட்டை அடைந்தேன். உலக மகா சோம்பேறி ஒருவனைக் கண்டேன், என்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அரசன், அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான். சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சிலர் அவனைத் துறவி என்றார்கள். சிலர் அவனைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்தார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன். அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்துகூ கொண்டான். பேச வேண்டி வரும் என்பதால் தன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல். பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன்.
வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன். அவனுக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தது.
 
(Thanks: Koodal.com)
.


Saturday, January 5, 2013

இளைஞனின் ரயில் பயணம்

ஒரு நாள் தந்தையும் , அவரின் 24 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த இளைஞன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து, "மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினார். அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

கொஞ்ச நேரம் கழித்து, " அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

இதை கவனித்து கொண்டிருந்த எதிரில்  இருந்த தம்பதியினர், " இவரை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா?" என்று கேட்டனர். அதற்கு அந்த தந்தை ," ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது." என்று சொன்னார்.

எனவே , "ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"

Thursday, January 3, 2013

கண் தெரியாத பிச்சைக்காரரின் இனிய நாள்!!!

கடை தெரு ஒன்றில் கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் அருகில் ஒரு பலகையில் "எனக்கு கண் தெரியாது, உதவி செய்யுங்கள் " என்று எழுதி வைத்திருந்தார்.  இதை பார்த்து அவ்வழியில் செல்வோர் அவருக்கு உதவி செய்தனர்.

அவ்வழியில்  சென்ற ஒரு நபர் அந்த பலகையில்  இருந்த வாசகத்தை அழித்து விட்டு , வேறொரு வாக்கியத்தை அதில் எழுதி விட்டு சென்று விட்டார். அந்த நாள் பிச்சைக்காரருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர். பிச்சைக்காரருக்கு மிக்க மகிழ்ச்சி. எனவே அதில் என்ன வாக்கியம் இருக்கிறது என தெரிந்து கொள்ள அவ்வழி சென்ற ஒருவரிடம் , "இந்த பலகையில் இருக்கும் வாக்கியத்தை எனக்கு வாசித்து காட்ட முடியுமா?"  என கேட்டார்.

அந்த நபர் வாசித்தார்,  "இந்த நாள் மிகவும் அழகான நாள், ஆனால் என்னால் பார்க்க முடிய வில்லை!!!".

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில், நம்முடைய கருத்தை வெளிபடுத்தும் விதம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

Tuesday, January 1, 2013

குரங்கும்... ஆமையும் ...

ஒரு காட்டின் வழியே ஆமை ஒன்று உணவு தேடி சென்று கொண்டிருததாம். அப்பொழுது அந்த வழியே வந்த குரங்கு ஒன்று ஆமையிடம், "ஏய் ஆமையே இந்த காட்டுக்குள்ள எங்க போறே" ன்னு கேட்டதாம்.

அதற்க்கு ஆமை, "மூன்று நாட்களா நான் சாப்பிடவே இல்லை உணவு தேடி போகிறேன்னு சொன்னதாம்.
"அப்படியா நானும் சாப்பிட்டு மூன்று நாட்களாச்சு"..ன்னு குரங்கு பதில்  சொன்னதாம்.  அப்பிடியா அப்ப நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து உணவு தேடுவோம்னு ஆமை சொல்லுச்சாம்.

இருவரும் பேசி கொண்டே இரை தேடி சென்றனர். இருவரும் நண்பரகளாகி விட்டனர். 

தூரத்தில் குரங்கு ஒரு வாழை மரத்தை பார்த்தது. அதில் வாழை பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன. இதை ஆமையிடம் காண்பித்தது.  ஆமையின் கண் பார்வைக்கு தூரத்தில் இருக்கும் வாழை மரம் தெரியவில்லை. வாழை மரத்தின் அருகில் சென்று பார்த்தவுடன் ஆமைக்கு ஒரு மகிழ்ச்சி.  ஆனால் என்ன செய்ய....  மரத்தில் ஏற முடியாதே!!!  என ஆமை யோசித்து கொண்டிருந்தது. அதற்க்கு குரங்கு " கவலைபடாதே நான் உனக்கு வாழை  பழத்தை பறித்து கீழே எறிகிறேன். எடுத்து கொள்" ன்னு சொன்னது.


குரங்கு வாழை மரத்தில் ஏறி அனைத்து பழங்களையும் சாப்பிட ஆரம்பித்தது. வாழை பழ தோலை கூட விட்டு வைக்க வில்லை.  கீழே காத்திருக்கும் நண்பனை மறந்துவிட்டு சந்தோசமாக சாப்பிட்டு கொண்டிருந்தது. ஆமை கூப்பிட்டாலும் அதை சட்டை செய்யாமல் இருந்தது.

இந்த செயல் ஆமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த குரங்குக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமென எண்ணியது.
வாழை மரத்தின் கீழே உடைந்த கண்ணாடி துகள்களை பரப்பி வைத்து விட்டு ஒரு தேங்காய் மூடியின் அடியில் போய் ஒளிந்து கொண்டு என்ன நடக்கிறது என பார்பதற்க்கு ஆவலாக காத்திருந்தது.

வயிறு முட்ட சாப்பிட்ட குரங்கு மெதுவாக வாழை மரத்தின் கீழே இறங்கியது. கீழே இருந்த கண்ணாடி துகள்கள் குரங்கின் காலை பதம் பார்த்தது. கை,கால்களில் இருந்து இரத்தம்  கொட்ட தொடங்கியது. வலியால் துடித்த குரங்கு,இது ஆமையின் செயல் தான் என்பதை கண்டு பிடித்தது. ஆமையை பலி வாங்க ஆமையை  தேடியது. தேங்காய் மூடியின் அடியில் போய் ஒளிந்து கொண்டு இருந்த ஆமையை கண்டு பிடித்து அதை கொல்லத் துடித்தது.

உயிருக்கு மன்றாடிய ஆமையிடம் , "நீ நெருப்பில் சாகிறாயா என கேட்டது". அதற்க்கு ஆமை நான்  தண்ணிரில் சாகிறேன் என்று சொன்னது.  ஆமை நீரிலும், நிலத்திலும் வாழும் என்பதை மறந்த முட்டாள் குரங்கு ஆமையை ஓடும் ஆற்றில் தூக்கி வீசியது. உயிர் பிழைத்த ஆமை , " இது தான் என் வீடு " என சந்தோசமாக நீந்தி சென்றது.

இதனால் கோபமான குரங்கு ஆற்றில் குதித்து ஆமையை கொல்ல சென்றது.  ஆழமான சுழல் இருக்கும் பகுதியில் நீந்த முடியாமல் சிக்கி மூழ்கி இறந்து போனது. 

"நாம் அனைவருக்கும் நல்லது நினைத்தால் நமக்கும் நல்லது நடக்கும்"

சுறுசுறுப்பு எறும்பும் , சோம்பேறி வெட்டுக்கிளியும்....


வெட்டுக்கிளி ஒன்று சந்தோசமாக பாட்டு பாடி கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியில் ஒரு எறும்பு ஒன்று தன்னை விட உயரமான,கனமான உணவை இழுத்து கொண்டு போனதை பார்த்த வெட்டுக்கிளி, "ஏய் எறும்பே எங்கே போய் கொண்டிருக்கிறாய்.. என்னை பார்த்து ஒரு வார்த்தை பேசாமல் போகிறாயே" என்று கேட்டது.


"எனக்கு தேவையான உணவை இப்பொழுது சேர்த்து வைக்கிறேன் அது எனக்கு பிற்காலத்தில் உதவியாக இருக்கும். நீயும் உனது உணவை இப்பொழுதே சேர்த்து வச்சுக்கோ.. அது உனக்கு வெயில் காலத்தில் உணவு கிடைக்காத சமயத்தில் பேருதவியாக இருக்கும் "  என எறும்பு கூறியது.

இதை கேட்ட வெட்டுக்கிளி நக்கலாக சிரித்து விட்டு, " இப்பொழுது எனக்கு தேவையான எல்லா உணவும் கிடைக்கிறேதே, பின் நான் ஏன் பிற்காலத்தை பற்றி இப்பொழுதே கவலை பட வேண்டும்" என கேலியாக பேசிவிட்டு தனது பாட்டை தொடர்ந்து பாடி கொண்டிருந்தது.



வெயில் காலமும் வந்தது.. கூடவே உணவு பஞ்சமும் வந்தது... வெட்டிக்கிளி உணவு தேடி அலையும் சமயத்தில் எறும்பை சந்திக்க நேர்ந்தது. வெட்டிக்கிளிக்கு ஒரே ஆச்சார்யும், "என்னடா யாருக்கும் உணவு கிடைக்கல. உனக்கு மட்டும் எப்படி கிடைத்து " என்று எறும்பை பார்த்து கேட்டது. 

அதற்கு எறும்பு, "உணவு கிடைக்கும் சமயத்தில் நான் சேர்த்து வைத்தேன் அது எனக்கு இப்பொழுது உதவியாக இருக்கிறது" என பதில் சொல்லி விட்டு, பசியால் வாடும் வெட்டிக்கிளிக்கு  கொஞ்சம் உணவு கொடுத்து அதன் பசியை போக்கியது.பசி போனவுடன் வெட்டிக்கிளிக்கு   ஒரே மகிழ்ச்சி..

வெட்டுக்கிளி தன்னுடைய தவறை எண்ணி வருந்தியது. இனி மேல் உணவு கிடைக்கும் சமயத்தில் கால விரயம் செய்யாமல் சுறுசுறுப்புடன் உணவை சேர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டது.

பூனையை ஏன் நாய் துரத்துக்கிறது தெரியுமா?

ஒரு ஊரில் நாயும், பூனையும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருதார்கள். கணவர் நாயானது கடுமையான உழைப்பாளி.  அதிகாலை எழுந்த உடன் வேலைக்கு சென்று விடும். வேலை முடிய இரவாகி விடும். வேலையை முடித்து விட்டு வேலைக்கான கூலியை வைத்து வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வரும்.  வீட்டிற்கு வரும் பொழுது நாயுக்கு பசி வயிறை கிள்ளும்.

பசிக்கும் பொழுது உணவு இருந்தால் யாராவது வேண்டாமென சொல்வார்களா என்ன?  ஆனால் நாய் வீட்டிற்க்கு வந்தால் உணவு தயராக இருக்காது.

நாய்,பூனையிடம் ஏன் உணவு தயார் செய்ய வில்லை என கேட்டால "எனக்கு உடம்பே சரி இல்லை" ன்னு சொல்லும்.  நாயும் வேற வழி இல்லாமல் பூனைக்கும் அது குட்டிகளுக்கும் சேர்த்து சமைக்கும். சாப்பிட்டு உறங்க செல்ல நடுநிசி ஆகிவிடும். இந்த வழக்கம் ஒரு நாள்,இரண்டு நாள் இல்லாமல் வார, மாத கணக்கில் தொடர்ந்தது. இதனால் நாயின் உடம்பில் வலு குறைய ஆரம்பித்தது. சரியான உறக்கம் இல்லையெனில் கஷ்டம் தானே?

நாய்,பூனையை டாக்டரிடம் அழைத்து செல்லலாம் என எண்ணி பூனையிடம், " உன்னுடைய உடம்பை டாக்டரிடம் சென்று காண்பிப்போம்" என அழைத்தது.அதற்க்கு பூனை வர மறுத்துவிட்டு, " எல்லாம் கொஞ்ச நாளான சரியாய் போகும்ன்னு" சொல்லி போக்கு காட்டியது.

இந்த விஷயம் நாயிக்கு சந்தேகத்தை கிளப்பியது. "உண்மையிலயே பூனைக்கு உடம்பு சரி இல்லையா? இல்ல நம்ம கிட்ட பொய் சொல்லுதானு கண்டுபிடிக்க ஆசை பட்டது". ஒரு நாள் காலை வேலைக்கு செல்வது போல கிளம்பி ஒரு மறைவில் ஒளிந்து கொண்டு பூனை என்ன செய்கிறது என கண்காணிக்க ஆரம்பித்தது.

பூனையானது கணவர் வேலைக்கு சென்று விட்டார் என எண்ணி தனது குட்டிக்குளுடன் சந்தோசமாக விளையாட ஆரம்பித்தது. விளையாண்டு முடித்தவுடன் நன்கு படுத்து உறங்கியது. தனது நாளை சோம்பேறியாகவே கழித்தது. இதை எல்லாம் மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருத்த நாய், மிகவும் கோபத்துடன் பூனையின் எதிரே சென்று நின்றது. இதை பார்த்த பூனை சடாலென ஒரு கூலாங்க் கல்லை எடுத்து வாயினுள் வைத்துக் கொண்டு எனக்கு  "காலையில் இருந்து ஓரே பல் வலி"என பொய் சொல்லியது. எல்லாம் மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருத்த நாயிக்கு பொய் என தெரியாத என்ன? 

நாய் மிகவும் கோபத்துடன் பூனையை விரட்ட ஆரம்பித்தது , அது இன்றும் நிற்காமல் தொடர்கிறது என ஒரு அமெரிக்க் கதை ஒன்று சொல்கிறது.